|
|
Health Predictions in KP Astrology
|
நவகிரகங்களில் சந்திரன், பூமியில் உள்ள நீர் நிலைகளின் மேல் ஆதிக்கம் செலுத்தக் கூடிய கிரகம் ஆகும்.
உதாரணத்திற்கு,
கடலில், அலைகளின் தாக்கம் என்பது..
முழு நிலவான பௌர்ணமி தினத்தன்று இயல்பை விட கூடுதலாகவும்,
அமாவாசை தினத்தன்று சற்று மந்த கதியாகவும் இருந்து வருவது விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்ட ஒன்றாகும்.
இது போல நம் மனித உடலில், நீர் தன்மையுடைய இரத்தம் மற்றும் அதனின் ஓட்டத்தை (Blood Pressure) குறிப்பவரும் சந்திர பகவானே.
கடல் அலைகளை போலவே..
ஒரு மனிதனின் இரத்த ஓட்டத்திலும் (BP) பௌர்ணமி, அமாவாசை தினங்களில் வித்தியாசம் என்பது இருக்கும்.
அதாவது, ஒரு மனிதனின் இரத்த ஓட்டமானது..
பௌர்ணமி தினத்தன்று அவரது சராசரி அளவை விட சற்று கூடுதலாகவும், அமாவாசை தினத்தன்று சராசரி அளவை விட சற்று குறைவாகவும் இருப்பதை நன்கு உணர முடியும்.
சந்திரனை போலவே.. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட சில உடல் உறுப்புகளை அறிவியல் ரீதியாக ஆளுமை செய்கின்றன.
|
|
அதை தான் அடியேன்..
இங்கே மேலே உள்ள புகைப்படத்தில் தெளிவாக தொகுத்து வழங்கியுள்ளேன்.
ஜாதகத்தில் ஒரு கிரகம் கெட்டிருந்தால் (ஜாதகருக்கு தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்தால்) நிச்சயம் அந்த கிரகம் குறிப்பிடும் உடல் உறுப்புக்களில் பாதிப்பு ஏற்படும்.
உதாரணத்திற்கு,
நவகிரகங்களில் ராகு பகவான் நுரையீரலை குறிக்கக் கூடிய கிரகம் ஆகும். ஒரு ஜாதகத்தில் ராகு கெட்டிருந்தால், அந்த ஜாதகருக்கு நுரையீரலில் பிரச்சனைகள் ஏற்படும். ஆஸ்துமா போன்ற நோய்களால் ஜாதகர் கஷ்டங்களை அனுபவிப்பார்.
மருத்துவ துறையை பொருத்த வரையில்,
ஒருவரை Scan, Test and Diagnose செய்வதன் மூலமாக..
அவரின் நோய் எதிர்ப்பு திறன் எந்த அளவிற்கு உள்ளது?
அவருக்கு என்ன நோய் உள்ளது? அந்த நோயின் வீரியம் என்ன? அந்த நோய் எப்போது குணமாகும்?
போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்..
ஆனால் பொதுவாக..
ஒரு நோய் தாக்கிய பின்னரோ அல்லது அதற்கான அறிகுறிகள் நம் உடலில் ஏற்பட்ட பிறகே நாம் மருத்துவர்களை நாடி செல்கிறோம்.
அப்படி செல்லும் பொழுது.. அந்த நோயின் வீரியம் குறைவாக இருந்தால் பரவாயில்லை..
அதுவே மிகவும் வீரியமாக இருந்தால்?? கஷ்டம் அல்லவா??
மேலும் ஒரு சில நேரங்களில் நமக்கு சில நோய்க்கான அறிகுறிகளே தென்படுவதில்லையே!!!!
Prevention is better than Cure.
அதாவது "வரும் முன் காப்பதே சிறந்தது" என நாம் ஒரு பழமொழி படித்து இருப்போம்.
இந்த பழமொழிக்கு சான்றாக,
ஒரு நோய் வருவதற்கு முன்பு....
ஏன் அதற்கான அறிகுறிகள் ஏற்படும் முன்னரே அறிய முடியுமா? என்று கேட்டால்..
முடியும்!
தெய்வீக கலையான ஜோதிடத்தின் வாயிலாக நிச்சயமாக முடியும்!!
ஒருவரின் ஜனன ஜாதகத்தை ஆய்வு செய்வதன் மூலமாக..
அவருக்கு என்ன நோய்கள் வரும்? மேலும் அது எப்போது வரும்?? என்பதை தெளிவாக கால நிர்ணயம் செய்யவும் முடியும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்..
உடல் ஆரோக்கியத்திற்கான ஜாதக ஆய்வு என்பது கிட்டத்தட்ட lifetime health check up-க்கு ஒப்பானதாகும்.
ஓர் உறுப்பில் பாதிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
1. பிறக்கும் போதே பாதிப்புடன் பிறப்பது..
2. சில மோசமான உணவு முறையின் பக்கவிளைவாக பாதிப்பு ஏற்படுவது..
3. நமது அன்றாட பழக்க வழக்கங்களின் விளைவாக பாதிப்பு ஏற்படுவது..
4. விபத்தினால் பாதிப்பு ஏற்படுவது..
5. இயற்கையில் குறைவான நோய் எதிர்ப்பு திறனுடன் இருப்பது..
மேற்சொன்னவற்றில்,
குறிப்பாக 2, 3, 4, 5 ஆகிய பிரச்னைகளை ஜோதிடத்தின் வாயிலாக முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கான தீர்வினையும் ஜோதிடரிடம் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
|
|
|
|
|
|
|
RELATED TAGS:
Astro Arun | Tamil Astrology Online | Online Astrology Predictions in Tamil | Online Horoscope Predictions in Tamil | Learn Astrology in Tamil | Online Astrology Classes in Tamil
|
|
|
|